புத்தர் சொரூபம் மீது நடத்தப்பட்ட கழிவுத் தாக்குதல் - தாக்குதல்தாரியை தேடி பொலிஸார் வலை வீச்சு

புத்தர் சொரூபம் மீது நடத்தப்பட்ட கழிவுத் தாக்குதல் - தாக்குதல்தாரியை தேடி பொலிஸார் வலை வீச்சு

புத்தர் சொரூபம் மீது கழிவு தாக்குதலை நடத்தியவரை கைது செய்ய பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கம்பஹா திவுலப்பிட்டிய வைத்தியசாலை அருகே உள்ள புத்தர் சொரூபம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தாக்குதல் நடத்தியவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.