ஆறுமுகன் தொண்டமான் சிறந்த நகைச்சுவையாளர்: சபையில் டக்ளஸ் புகழாரம்!

ஆறுமுகன் தொண்டமான் சிறந்த நகைச்சுவையாளர்: சபையில் டக்ளஸ் புகழாரம்!

கருத்தாழமிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார் கடற்றொழில் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கருத்தாழமிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு, மலையக மக்களுக்குப் பேரிழப்பு.

1994ஆம் ஆண்டு, யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக முதல் தடவையாக தான் நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்த போது, அமரர் ஆறுமுகம் தொண்மானும் நாடாளுமன்றுக்கு வந்திருந்தார்.

அன்றுமுதல், இந்த உலகை விட்டுப் பிரியும் வரையில், கட்சியின் தலைமைப் பதவியிலும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, கால்நடைகள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட வீடமைப்பு என பல்வேறு அமைச்சுப் பதவிகளிலும் இருந்து, மலையக மக்களுக்கு மாத்திரமின்றி, இந்த நாட்டு மக்களுக்கே அளப்பறிய சேவைகளை ஆற்றிய பெருமை, அமரர் ஆறுமுகன் தொண்டமானைச் சாரும்.

கால்நடைகள் வள அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில், யாழ்ப்பாணத்துக்கு வெளிநாட்டு மாடுகளின் தேவை குறித்து ஒருமுறை நான் தொலைப்பேசியிலே அவருடன் உரையாடியபோது, ‘உங்களுக்குத் தேவையான மாடுகளை ஏற்றிக் கொண்டு, அந்த வண்டியிலே நானும் ஏறி வருகிறேன்’ என நகைச்சுவையாக அவர் கூறியிருந்தார்”என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.