தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டம்..!

தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டம்..!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டில் தற்போது பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுளு;ள கஞ்சிபானை இம்ரான், கொஸ்கொட தாரக்க, பொடி லெசி மற்றும் வெலே சுதா உள்ளிட்ட 40 கைதிகள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று காலை முதல் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு தொலைபேசி வசதிகளை பெற்றுக்கொடுத்தல், தங்களை சந்திக்க வரும் சட்டத்தரணிகளுடன் உரையாடுவதற்கு அதிக காலம் வழங்குதல், வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றம் சென்று மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பும்போது முன்னெடுக்கப்படும் பரிசோதணைகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, சிறைக் கைதி ஒருவரினால் மேற்கொள்ளப்படும், போதைப்பொருள் வர்;த்தகத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட, 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி - வென்னவத்தை பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து, 100 கிராம் 983 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த குறித்த இருவரும், 27 மற்றும் 42 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள பொருல்லே சம்பத் என்ற நபர் மேற்கொள்ளும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்புடைய உதவியாளர் ஒருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவருடன் தொடர்புடைய சந்தேகத்தில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.