இலத்திரனியல் சாதனங்களின் கழிவுகளை சேகரிக்க நடவடிக்கை!

இலத்திரனியல் சாதனங்களின் கழிவுகளை சேகரிக்க நடவடிக்கை!

நாட்டில் உள்ள இலத்திரனியல் உபகரண கழிவுகளை   சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை தபால் ஊழியர்களின்  உதவியுடன் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சேகரிக்கப்படும் கழிவு இலத்திரனியல் உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, மீள்சுழற்ச்சிக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.