மதுகம பேருந்து நிலைய தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு
மதுகம பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
பேருந்து சாரதிகள் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு இறுதியில் தாக்குதல் சம்பவமாக மாறியதன் காரணமாக இதனுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேருந்து பயண இலக்கம் 285 சங்கத்தின் செயலாளர் பிரசன்ன குணசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.