வெளியேறினார் ரணில் விக்கிரமசிங்க..!
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான்கரை மணிநேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது.
இன்று முற்பகல் 9.50 அளவில், அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
இந்த நிலையில், நான்கரை மணிநேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அவர் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.