பேலியகொடை மெனிங் சந்தைக் கட்டிடத் தொகுதி நவம்பர் மாதம் திறப்பு

பேலியகொடை மெனிங் சந்தைக் கட்டிடத் தொகுதி நவம்பர் மாதம் திறப்பு

பேலியகொடை மெனிங் சந்தைக் கட்டிடத் தொகுதி எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ஸ்ரீமல் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்டிடத் தொகுதியின் நிர்மானப்பணிகளை பார்வையிடுவதற்காக செயலாளர் அங்கு விஜயம் செய்த போதே இதனை குறிப்பிட்டார்.

பேலியகொடை மெனிங் சந்தைக் கட்டிடத் தொகுதி நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் பொது மக்களின் பாவனைக்காக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு, ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி இந்த வர்த்தக சந்தை தொகுதியை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நிர்மாணத்துறையில் எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.