கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,998ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 126 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தில் மேலும் 11 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.