ஸ்ரீலங்காவில் ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை!

ஸ்ரீலங்காவில் ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை!

கம்பஹா - பெப்பிலியவெல பகுதியில் உள்ள 29 வயதுடைய தாய் ஒருவருக்கு நேற்று ஐந்து குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

எனினும் குறித்த தாய் தற்போது அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாய்க்கு கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன.

குழந்தைகள் மற்றும் தாயார் நலமுடன் உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

எனினும் குறித்த பெண் குழந்தைகளின் தாய் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டிஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.