நாடாளுமன்றம் செல்லும் பஷில்? வெளியாகியது புதிய தகவல்

நாடாளுமன்றம் செல்லும் பஷில்? வெளியாகியது புதிய தகவல்

நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து நாட்டுக்கான சேவையை ஆற்றுவதையே சிறப்பானதாக கருதுகின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்தில் பங்கேற்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்களாயின் அது தொடர்பில் ஆராய தயாராக இருக்கின்றேன்.

நாடாளுமன்றத்தை விட அதற்கு வெளியிலிருந்து சேவை செய்வதை சிறப்பாகக் கருதுகின்றேன்.

தேவை ஏற்படின் நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அது பற்றி சிந்திக்கலாம். ஆனால் வெளியிலிருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதையே விரும்புகின்றேன்.

இதே வேளை புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காவே மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர். அதற்காகவே நாமும் மக்களிடம் மூன்றில் இரண்டைக் கோரினோம். எனவே அதனைச் செய்யாவிடின் மூன்றில் இரண்டைப் பெற்றது அர்த்தமற்றதாகிவிடும்.

நாடாளுமன்றத்தில் 113 என பெரும்பான்மை கிடைத்திருந்தாலே எமக்கு போதுமானது. ஆனால் 150 என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருக்கின்றனர்.

எனவே புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.