சிங்களவரல்லாத பிரதிநிதிகளை வெளியேற்ற சூழ்ச்சி! 19ஆவது திருத்தத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

சிங்களவரல்லாத பிரதிநிதிகளை வெளியேற்ற சூழ்ச்சி! 19ஆவது திருத்தத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

சிங்களவரல்லாத இரண்டு பிரதிநிதிகளை வெளியேற்றும் நோக்கத்துடன் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் 19ஆவது திருத்தத்தில் இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

47 உறுப்பினர்களைக் கொண்ட பத்து சுயாதீன ஆணைக்குழுக்களிலும் இரண்டு உறுப்பினர்களை மாத்திரமே அரசாங்கம் குறிவைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியதால் அரச ஊழியர்களுக்கு சுயாதீனமாக பணியாற்றக்கூடியதாக இருந்தது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தொடர்ந்து இரண்டு அதிகாரிகள் தொடர்பில் கேள்வி எழுப்பி வருவதாகவும், அவர்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவர்களை நீக்குவதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும் கூறி வருகிறார்.

அரசாங்கம் எப்போதுமே இரண்டு நபர்களைப் பற்றியே பேசுகிறது. இந்த இரண்டு நபர்கள் யார்?

அரசியலமைப்பு சபையின் ஜாவிட் யூசுப் பற்றி கருத்து வெளியிடுவதை நாம் கண்டோம். அவர் ஒரு இலங்கை பிரஜையா எனக் கேட்கின்றார். விரும்பினால் அவரை அகற்றலாம். பின் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் பற்றி விமர்சிக்கின்றார்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் சுயாதீனமானவர்கள் எனவும், அவர்கள் விரும்பியபடி செயற்பட முடியும்

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் தலையீட்டுடன் நியமிக்கப்படும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், பத்து சுதந்திர ஆணைக்குழுக்களுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

அத்தகைய ஒரு ஜனநாயக கட்டமைப்பில் பத்து சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுவதால் ஏற்படும் பிரச்சினை என்ன? இரண்டு பிரதிநிதிகளுக்காக அனைத்து ஆணைக்குழுக்களையும் ஒழிக்க வேண்டுமா ? என பல கேள்விகளை அரசாங்கத்திடம் எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், "திருத்தம்" என்பதற்குப் பதிலாக ”இல்லாமல் செய்தல் அல்லது "ஒழித்தல்” என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்கக்கூடியதாக இருப்பதாகவும், இந்த சொல் "விதிமுறைக்கு அப்பாற்பட்டது" எனவும் அவர் கூறியுள்ளார்.