பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியினை அழிப்பதற்கான நடவடிக்கை ..!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியினை அழிப்பதற்கான நடவடிக்கை ..!

ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை இயந்திரம் ஒன்றின் மூலம் அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு வர்த்தகர் ஒருவரே ஆலோசனை வழங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட இயந்திர சாரதியிடம், காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் குறித்த வர்த்தகரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தின், ஆனைவிழுந்தான் ரம்சார் ஈரவலையத்தின் ஒரு பகுதியை அழிக்க பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இயந்திர வாகனத்துடன் அதன் சாரதி நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.