பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது (21-8-1821)

பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது (21-8-1821)

16-ம் நூற்றாண்டில் இத்தாலியின் பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்சி என்பவர் பொப்லார் பலகையில் மோனா லிசா ஓவியத்தை வரைந்தார். இது எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் ஜியோகோண்டோவின் மனைவி லிசா கெரார்டினியின் உருவப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. உலகின் மிகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான இந்த ஓவியத்தை பல்வேறு அறிஞர்கள்

 

16-ம் நூற்றாண்டில் இத்தாலியின் பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்சி என்பவர் பொப்லார் பலகையில் மோனா லிசா ஓவியத்தை வரைந்தார். இது எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் ஜியோகோண்டோவின் மனைவி லிசா கெரார்டினியின் உருவப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகின் மிகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான இந்த ஓவியத்தை பல்வேறு அறிஞர்கள் திறனாய்வு மற்றும் ஆராய்ச்சி செய்துள்ளனர். பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 


இந்த அருங்காட்சியகத்தில் வைத்திருந்த இந்த ஓவியம் 1911ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி திருடப்பட்டது. மறுநாள் அங்கு சென்ற பிரெஞ்சு ஓவியர் லூயிஸ் பீராட், தனது ஓவியங்களை பார்வையிட்டபோது, 5 ஆண்டுகளாக மோனோ லிசா ஓவியம் இருந்த இடம் காலியாக இருந்தது. அந்த ஓவியம் பொருத்தப்பட்ட 4 முறுக்காணிகளை அவர் கண்டுபிடித்தார். இதனால் வணிக நோக்கத்திற்காக அதை புகைப்படம் எடுப்பதற்காக திருடியிருக்கலாம் என்று சந்தேகிப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

பின்னர் நீண்ட விசாரணைக்குப் பிறகு அருங்காட்சியகத்தின் ஊழியர் பெருகியா என்பவர், ஓவியத்தை திருடியது தெரியவந்தது. அதனை விற்பனை செய்ய முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.