தனியார் கல்வி நடவடிக்கைகளையும் மத வழிபாட்டுத் தலங்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சிடம் இருந்து அனுமதி
ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மத வழிபாட்டுத் தலங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது அதிகபட்சமாக 50 பேருக்கு மாத்திரமே வழிபாடுகளில் ஈடுபட முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதது மற்றும் தனியார் கல்வி நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்குவது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களில் 100 மாணவர்களை மாத்திரம் உள்வாங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த கல்வி நடவடிக்கைகளை ஜூன் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.