போதைபொருள் பாவனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

போதைபொருள் பாவனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டில் உள்ள சந்தைகளில் ஐஸ் ரக போதைபொருள் வியாபாரத்திற்காக கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்சமயம் பல பாகங்களிலும் உள்ள போதைபொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.