3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

அதிகரித்து வரும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் முதன்முறையாக அமெரிக்க வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அவை மேலும் உயர்த்தப்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வட்டி வீதங்களைக் குறைக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், மத்திய வங்கியால் ஏகமனதான தீர்மானத்தின் மூலம் வட்டி வீதங்கள் 3.5%-3.75% இலிருந்து 3.75%-4% ஆக உயர்த்தப்பட்டுள்ளன. 

பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதுடன், அது நீண்டகாலமாக நீடிக்கிறது எனக் குறிப்பிட்ட மத்திய வங்கியின் தலைவர் கெவின் வோர்ஷ், இது ஒரு "தெளிவான" மற்றும் "பொறுப்பான தீர்மானம்" என்றும் கூறினார். 

இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப், கெவின் வார்ஷிற்குத் தனது ஆதரவை வெளியிட்ட போதிலும், வட்டி வீதத் தீர்மானங்களில் வாக்களிக்கும் மத்திய வங்கி சபை எதிர்ப்பான போக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

உயர்ந்த வட்டி வீதங்கள் கடன், வீடமைப்புப் பிணைக்கடன் மற்றும் கடன் அட்டைகளைப் பெற விரும்புவோருக்குக் கடன்களை அதிக செலவுடையதாக்குகின்றன. 

இருப்பினும், இது சேமிப்புகளுக்குச் சிறந்த பலன்களை அளிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீர்மானத்தைத் தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய வங்கித் தலைமையிற்குள் நம்பிக்கையான மனநிலை இருந்தபோதிலும், பணவீக்கம் தொடர்ந்து ஒரு பிரச்சினையாகவே உள்ளதாக வோர்ஷ் கூறினார். 

பல மத்திய வங்கிகளைப் போலவே, பணவீக்கத்தை 2% அல்லது அதற்குக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய வங்கியும் கொண்டுள்ளது. 

அமெரிக்க பணவீக்கம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கை விட அதிகமாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தொடங்கியது முதல் மொத்த விற்பனை எண்ணெய் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. 

இது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையையும் உயர்த்தியுள்ளதுடன், இதுவே அமெரிக்க வாக்காளர்களின் முதன்மை கவலைகளில் ஒன்றாக வாழ்வாதாரச் செலவை மாற்ற உதவியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.