கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் குத்திக் கொ*லை
கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) இரவு இந்தக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார்.
பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.