
எதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு
பல்வேறு எதிர்ப்பை மீறி, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியை நீதியமைச்சராக நியமிக்க, பிரதமர் எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராட்டியுள்ளார்.
அமைச்சரவையில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் குறித்து அக்கறை செலுத்தவில்லை எனவும், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் கேலிக்குரியவை எனவும் மங்கள தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர இறுதி நேரத்தில் நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.