அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்!

அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்!

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இருவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

 

அரசாங்கம் விசாரணைகள்

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகாலத்திலும் தற்போதைய அரசாங்கமும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்! | Ex President S Son Flees Sl To Australia

இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.