விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி - ஒருவர் மாயம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி - ஒருவர் மாயம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

இன்றைய (17) தினம் தெல்தெனிய பகுதியில் நான்கு இளைஞர்கள் குறித்த பகுதியில் நீராடிக் கொண்டிருந்த போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 

அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் காணாமல் போன ஒரு இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.