உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

அமெரிக்கா (USA) கடற்படை முற்றுகையை அடுத்து, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றித் திரும்பிச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடல்சார் போக்குவரத்துத் தரவுகளின்படி (Marine Traffic data), இரண்டு கப்பல்களும் நீரிணையை நெருங்கிய சிறிது நேரத்திலேயே தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன.    

ஈரானிய துறைமுகங்கள் மீதான இராணுவ முற்றுகை தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "கடற்கொள்ளை" என ஈரான் கடுமையாகக் சாடியுள்ளது. அத்துடன் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால் வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

 

strait of hormuz

இவ்வாறான பதற்ற சூழ்நிலையில்,  அமெரிக்காவின் முற்றுகை நடைமுறைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இந்த இருகப்பல்கள் தமது பயணப்பாதையை மாற்றி அமைந்துள்ளன

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த 188 மீற்றர் நீளமுள்ள ரிச் ஸ்டாரி (Rich Starry) என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல், நீரிணைக்கு அருகில் சென்றபோது திடீரெனத் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்ஸ்வானா கொடியை ஏந்திய 175 மீட்டர் நீளமுள்ள 'ஆஸ்ட்ரியா' என்ற இரண்டாவது எண்ணெய்க் கப்பலும், ஹோர்முஸ் நீரிணையை நெருங்கிய பிறகு தனது பாதையை மாற்றித் திரும்பத் தொடங்கியது.