அம்பாறையில் யுவதிக்குத் தொடர் பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது
அம்பாறையில் யுவதி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (27-02-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அக்கரைப்பற்று காவல் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றிலுள்ள 46 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதி காவல் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக இவ்வாறு பல பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.