கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம், மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்.

காங்கேசன்துறை முதல் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் காற்று வடகிழக்குத் திசையிலிருந்தும், ஏனைய பகுதிகளில் வடமேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்தும் மணித்தியாலத்திற்கு 20 - 40 km வேகத்தில் வீசும்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Heavy Rain With Massive Thunder And Lightning

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய வேளைகளில் பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், மின்னல் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.