சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபரொருவர் கைது

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபரொருவர் கைது

பிங்கிரிய பிரதேசத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மது தயாரித்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வலான ஊழல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது 200க்கும் அதிகமான சட்டவிரோத மதுபான போதல்கள் உள்ளடங்களாக மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.