தொடர்ந்து வான் பாயும் இரணைமடு நீர்த்தேக்கம்!
கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கம் தொடர்ந்தும் நிரம்பி வழிந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கிளிநொச்சி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 37 அடி 9 அங்குலமாக அதிகரித்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு அதிகரித்து வருவதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வான் கதவுகள் சுமார் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய எட்டு வான்கதவுகள் சுமார் ஆறு அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி நீர்த்தேக்கத்தின் வான் மட்டம் 36 அடி என்றும் மாவட்ட நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.