அம்பாறையில் பட்டப்பகலில் திருட்டு: மடக்கிய பொலிஸார்!

அம்பாறையில் பட்டப்பகலில் திருட்டு: மடக்கிய பொலிஸார்!

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடு ஒன்றில் பட்டப்பகலில் திருடிய நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவரிடம் இருந்து களவாடப்பட்ட தங்க நகைகள் மற்றும் களவாடிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், விற்ற பணத்தில் வாங்கிய கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் நாளை (10) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.