சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்

வெலிவேரிய - வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (08) காலை பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் வேபட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் | Person Who Died Suspiciously

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.