மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் பறிபோன உயிர்
போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 41 வயதான அனுருத்த குமார ஆவார். மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான அனுருத்த உடனடியாக வீரபோகுன அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டது.

பின்னர், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.