யாழ். ஆனைப்பந்தியில் தனிமையில் வசித்த பெண் சடலமாக மீட்பு

யாழ். ஆனைப்பந்தியில் தனிமையில் வசித்த பெண் சடலமாக மீட்பு

யாழில் (Jaffna) தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி - ஆனைப்பந்தியில் இடம்பெற்றுள்ளது

பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய கனகசுந்தரம் நந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் இவரது நடமாட்டம் இன்மையால் அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

யாழ். ஆனைப்பந்தியில் தனிமையில் வசித்த பெண் சடலமாக மீட்பு | Women Death Body Found In Jaffna Town

இதன்போது அவர் கட்டில் மீது சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டது.

பின்னர் சடலமானது மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.