யாழில் கரையொதுங்கிய சிலையால் பரபரப்பு; எங்கிருந்து வந்தது!

யாழில் கரையொதுங்கிய சிலையால் பரபரப்பு; எங்கிருந்து வந்தது!

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி   வளலாய் பகுதியில் கடற்கரையில் ( (Valalai Beach)) இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது.

சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

யாழில் கரையொதுங்கிய சிலையால் பரபரப்பு; எங்கிருந்து வந்தது! | A Statue Washed Ashore In Jaffna Valalai Beachஅதேவேளை மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில் , அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரையொதிங்கியிருந்தன.

அவ்வாறே சேதமடைந்த சிலையை கடலில் போட்ட நிலையில் அந்த சிலை வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

யாழில் கரையொதுங்கிய சிலையால் பரபரப்பு; எங்கிருந்து வந்தது! | A Statue Washed Ashore In Jaffna Valalai Beachகுறித்த சிலை தற்போது வளலாய் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் , சிலை கரையொதிங்கியமை தொடர்பில்அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் ,பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை  கடந்த  காலங்களிலும்  பௌத்த சம்ய தொடர்புபட்ட பொருட்கள்  யாழில் கரை ஒதுங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.