யாழில் பெண் உட்பட ஐவர் மடக்கிப் பிடிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , பெண் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஆணும், 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் பெண்ணும்80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025