
யாழ்.பொதுநூலகத்தைப் பார்வையிட்ட வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள்
வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் 14.10.2025 காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தைப் பார்வையிட்டனர்
குறித்த அதிகாரிகள் பலர் நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சுமார் 30 பேர் வரை வருகை தந்துள்ளதோடு இன்று குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளைய தினம் நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.