சாவகச்சேரியில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறந்து வைப்பு

சாவகச்சேரியில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறந்து வைப்பு

யாழ்.சாவகச்சேரி சிலுவம் - செல்வ விநாயகர் சனசமுக நிலையத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச்சிலை இன்று(11.10.2025) திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

சன சமூக நிலையத்தின் தலைவர் க.விஜயவாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சாவகச்சேரி நகராட்சி மன்ற சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெகதீஸ்வரன் செல்வராணி, சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கனகசபை கஜீதன், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.