யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து மயங்கிய நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதி, பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி | Mother Rode A Motorcycle With Her Son In Jaffna

இவர் கடந்த 19ஆம் திகதி ஊர்காவற்துறையில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு முன்பாக இடது பக்கமாக ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென பிரேக்கினை அழுத்தியவேளை பின்னாலிருந்த குறித்த பெண் திடீரென கீழே விழுந்து மயங்கியுள்ளார்.

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி | Mother Rode A Motorcycle With Her Son In Jaffna

பின்னர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.