மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு

மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு

 யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதிகளில் மனித மலக்கழிவுகள் , சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

காக்கை தீவு பகுதியை அண்மித்த வயல் காணிகள் , அதனை சூழவுள்ள வெற்றுக்காணிகளுக்குள் இனம் தெரியாத நபர்கள் இரவு வேளைகளில் மலக்கழிவுகள் உட்பட கழிவுகளை பவுசர் வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.

மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு | Jaffna Kakkai Theevu Stinks Of Human Waste

அதனால் அயலில் வசிக்கும் மக்கள் தூர்நாற்றம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

நிலத்தில் கொட்டப்படும் மலக்கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கும் அபாயம் காணப்படுவதுடன் , மழை காலங்களில் வெள்ள நீருடன் கலந்து நீர் நிலைகளுடன் கலப்பதுடன், வீடுகளுக்குள் வெள்ள நீருடன் கலந்து வருவதாகவும் பிரதேசவாசிகல் கூறுகின்றனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரனுக்கு அறிவித்ததை அடுத்து நேற்றைய தினம் (24) அப்பகுதி சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் , நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் , உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.