யாழில் சுழன்றடித்த காற்றால் வீட்டின் மீது விழுந்த மரம்; 12 பேர் பாதிப்பு

யாழில் சுழன்றடித்த காற்றால் வீட்டின் மீது விழுந்த மரம்; 12 பேர் பாதிப்பு

யாழில் கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழில் சுழன்றடித்த காற்றால் வீட்டின் மீது விழுந்த மரம்; 12 பேர் பாதிப்பு | 12 People Affected By Whirlwinds In Jaffna

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழில் சுழன்றடித்த காற்றால் வீட்டின் மீது விழுந்த மரம்; 12 பேர் பாதிப்பு | 12 People Affected By Whirlwinds In Jaffna

மேலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.