யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு

யாழ்ப்பணம் - சுன்னாகம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 14ஆம் திகதி உணவருந்தி விட்டு இருந்த வேளை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டு முற்றத்திற்கு வந்தவேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவசர நோயாளர் காவு வண்டியை அழைத்த  வேளை அவ்விடத்திற்கு வந்த ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டு திரும்பிச் சென்றனர்.

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு | Men Sudden Death In Jaffnaஇந்நிலையில் நேற்றையதினம் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.