யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு

யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரனை பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு | Jaffna University Dr Sudarsini Upendran Promotedபல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (31), சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய பேரவைக் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் படி, பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பௌதிகவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.