கொட்டித் தீர்க்கப் போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப் போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் சில மாவட்டங்களிலும் இன்று (10) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (10.05.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்திலும், புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கொட்டித் தீர்க்கப் போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Today Weather Forecast In Tamil இதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.  

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.