யாழ்ப்பாணத்தில் வறுமையின் கொடுமை : பரிதாபகரமாக பறிபோன குடும்பஸ்தரின் உயிர்

யாழ்ப்பாணத்தில் வறுமையின் கொடுமை : பரிதாபகரமாக பறிபோன குடும்பஸ்தரின் உயிர்

யாழ்ப்பாணம்(jaffna) - கோண்டாவில் வீதியால் இன்றையதினம்(30) பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வறுமை காரணமாக இன்று காலை உணவு அருந்தாமல் வெளியே சென்றுள்ளார். பின்னர் மதியம் கோண்டாவில் வீதியால் பயணித்தவேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வறுமையின் கொடுமை : பரிதாபகரமாக பறிபோன குடும்பஸ்தரின் உயிர் | Family Man Dies After Falling On Road In Jaffnaபின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.