
வவுனியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?
வவுனியாவில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் காணாமல் போன இளைஞன் குளக்கரையில் இரத்த கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப் பகுதியில் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என்பவர் ஆவார் .
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கடந்த 13ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.