எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவித்தல்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவித்தல்

இம்மாதம் தமது எரிபொருள் விலையும் திருத்தப்பட மாட்டாது என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் சினொபெக் நிறுவனமும் அறிவித்துள்ளன. 

இறுதியாகக் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த மாதம் எரிபொருள் விலை திருத்தப்பட மாட்டாது என ஏற்கனவே இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதன்படி, தற்போதைய விலையிலேயே மார்ச் மாதமும் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.