பொது பாவனைக்கு வரும் 7 ஜனாதிபதி மாளிகைகள்; அனுர அரசாங்கம் தீர்மானம்!

பொது பாவனைக்கு வரும் 7 ஜனாதிபதி மாளிகைகள்; அனுர அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் இரண்டு ஜனாதிபதி மாளிகைகள் மட்டுமே இராஜதந்திர நோக்கங்களுக்காக பராமரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேற்கண்ட நோக்கங்களுக்காக கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் மட்டுமே பராமரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொது பாவனைக்கு வரும் 7 ஜனாதிபதி மாளிகைகள்; அனுர அரசாங்கம் தீர்மானம்! | Lanka 7 Presidential Palaces Opened To Public Use

அதோடு , மீதமுள்ள ஜனாதிபதி மாளிகைகள் பிற பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, மீதமுள்ள கட்டிடங்களை அருங்காட்சியகங்களாகவும், சுற்றுலாத் துறைக்கான கல்வி மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொது பாவனைக்கு வரும் 7 ஜனாதிபதி மாளிகைகள்; அனுர அரசாங்கம் தீர்மானம்! | Lanka 7 Presidential Palaces Opened To Public Use

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பிரதான ஜனாதிபதி மாளிகை (ராஜகெதர) தவிர,  இலங்கையின் ஜனாதிபதி மாளிகைகள் நாடு முழுவதும் அமைந்துள்ள பிற ஜனாதிபதி மாளிகைகள் கண்டி (முன்னாள் பிலிமத்தலாவ அதிகாரம்கே வலவ்வ),

நுவரெலியா (முன்னாள் பிரிட்டிஷ் ஆளுநர்களின் ஓய்வு இல்லம்), அனுராதபுரம் உள்ள மாளிகை , மஹியங்கனை, கதிர்காமம், கேகாலை (டோசன் பங்களா), யாழ்ப்பாணம் (காங்கேசந்துறை புதிய அரண்மனை) மற்றும் அம்பாறை, லஹுகல ஆகிய இடங்களில் உள்ளன.

யாழ்ப்பாணத்திலும், அம்பாறையின் லஹுகலவிலும் புதிய ஜனாதிபதி மாளிகைகள் 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டன.

அதேவேளை யாழ்ப்பாண மாளிகையை நிர்மாணிக்க 200 மில்லியன் ரூபாய்களுக்கும் மேலாகவும், லஹுகல மாளிகையை நிர்மாணிக்க 110 மில்லியன் ரூபாய்களுக்கும் மேலாகவும் செலவிட்டதாக முன்பு தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.