வெளிநாட்டு பணவனுப்பல்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

வெளிநாட்டு பணவனுப்பல்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டு இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணவனுப்பல்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு | Foreign Remittances Increased In December

இந்த தொகை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.1 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு பணவனுப்பல்களின் மொத்த மதிப்பு 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.