இழப்பீடு பெறப்போகும் மற்றுமொரு தரப்பு: அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்
2023 நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (07) சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அது தொடர்பான மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்களின் பார்வை இல்லாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் முற்றிலும் பார்வையற்றவர்களாக மாறியுள்ளர்.இவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டது.
ஊனமுற்ற 17 நோயாளர்களுக்கு அரசினால் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நேற்று அமைச்சரவையில் தீர்மானித்தோம்.
இதுபோன்ற இழப்பீடு வழங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. எனவே, நாங்கள் இப்போது இழப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறோம்.
அது மாத்திரமன்றி, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
எனவே இது குறித்து ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம்."என்றார்.