ஆசிரியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு: மீள உருவெடுக்கும் சர்ச்சை

ஆசிரியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு: மீள உருவெடுக்கும் சர்ச்சை

அரச சேவையில் நிலவும் பாரிய சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 25,000 கொடுப்பனவை வழங்குமாறு ஐக்கிய கல்வி சேவை சங்கம் மற்றும் ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஊதியத்தை உயர்த்தும் வரை சிறிய தொகையை வாழ்வாதார எண்ணாக வழங்குவதில் அர்த்தமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய தொழிற்சங்க செயலாளர் பிரியந்த பத்பேரிய தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களான வசந்த சமரசிங்க மற்றும் மகிந்த ஜயசிங்க ஆகியோர் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூறி ரணில் - மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக நெடுஞ்சாலையில் இறங்கிப் போராடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு: மீள உருவெடுக்கும் சர்ச்சை | 25 000 Rs Allowance For Principals And Teachers

அத்தோடு, அவர்கள் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறும் ரணில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும் பிரியந்த பத்பேரிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்ற முதலாவது போராட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக கூறிய அவர், தற்போதைய அரசாங்கம் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகவும், முழு அரச சேவையினரின் சம்பளத்தை 25 வீதத்தால் அதிகரிப்பதாகவும் தேர்தலுக்கு முன்னர் கூறியதாகவும் அவர் நினைவு படுத்தியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு: மீள உருவெடுக்கும் சர்ச்சை | 25 000 Rs Allowance For Principals And Teachersஎவ்வாறாயினும், உதய செனவிரத்ன குழுவின் கூற்றுப்படி, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிப்பது இன்றியமையாதது என தொழிற்சங்க செயலாளர் பிரியந்த பத்பேரிய மேலும் கூறியுள்ளார்.