
79,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
31.12.2024 நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 79,000 மெட்ரிக் தொன் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 31,000 மெட்ரிக் தொன் கச்சா அரிசியும் 48,000 தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
மேலும், இந்த கையிருப்பில் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 780 தொன்கள் அரிசியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.