இளம் தம்பதி மீது துப்பாக்கிச்சூடு; கணவன் பலி

இளம் தம்பதி மீது துப்பாக்கிச்சூடு; கணவன் பலி

நேற்று (24) இரவு வெல்லவ - மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த இளம் தம்பதி மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளம் தம்பதி மீது துப்பாக்கிச்சூடு; கணவன் பலி | Young Couple Shot Husband Killedமரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் 30 வயதுடைய பெண் எனவும், அவர்கள் அப்பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த திருமணமான தம்பதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவலோ இதுவரை வெளியாகவில்லை .

மேலும் சம்பவம் தொடர்பில் , சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.