ஓசியானோஸ் கப்பல் கடலில் மூழ்கியது: பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்ட நாள்- 4-8-1991

ஓசியானோஸ் கப்பல் கடலில் மூழ்கியது: பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்ட நாள்- 4-8-1991

ஓசியானோஸ் என்ற கிரேக்க கப்பல் தென்ஆப்பிரிக்கா கடல் பகுதியில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 571 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது. * 1906 - சிட்னியில் மத்திய ரெயில் நிலையம் திறக்கப்பட்டது.

ஓசியானோஸ் என்ற கிரேக்க கப்பல் தென்ஆப்பிரிக்கா கடல் பகுதியில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 571 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


*  1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.

*  1906 - சிட்னியில் மத்திய ரெயில் நிலையம் திறக்கப்பட்டது.

*  1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய பிரிட்டன் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.

*  1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.

*  1936 - கிரேக்க தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தார்.

* 1946 - வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் பலியானார்கள்.  2 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

*  1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர், ஆண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் மர்மமாக இறந்து கிடந்தனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.