இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொடிய நோய்த்தொற்று!

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொடிய நோய்த்தொற்று!

இலங்கையை தட்டம்மை இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்திய போதிலும், கடந்த ஆண்டிலிருந்து நாடு மீண்டும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் வெளியீட்டின்படி, நவம்பர் 4 முதல் 9 வரை சிறப்பு தடுப்பூசி வாரமாக அறிவிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொடிய நோய்த்தொற்று! | Measles Threatens In Sri Lanka Again Vaccinationபுதிதாக பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 20-30 வயதுக்குட்பட்டவர்களில் பதிவாகியுள்ளன.

இந்த நோய் குழந்தைகளுக்கு, குறிப்பாக 9 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொடிய நோய்த்தொற்று! | Measles Threatens In Sri Lanka Again Vaccination20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியும், 9 மாதங்கள் முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசியும் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.